அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 11, 2021

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாணவர்கள் கூறிய முறைகேடு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வு முறைகேடு புகார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 2020-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 


இதில் முறைகேடுகளும், தங்களுக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் முறையிட்டனர். நன்றாக படிக்கும் சில மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முடிவுகளை எடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- 

MUST READ 


 செமஸ்டர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் 

 * கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். 

 * இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

 * பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம். 

 * இத்தேர்வு 3 மணி நேர ஆன்-லைன் தேர்வாக நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையே கடைபிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும். 
 * வருகிற ஏப்ரல்-மே செமஸ்டர் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும். 

MUST READ 


தேர்வுக்கு தயாராகுங்கள் 

பிற பல்கலைக்கழகங்களில் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற 25-ந்தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணவர்கள் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment