புவனகிரி அருகே கத்தாழை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 151 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜாகுலின் மற்றும் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 4-ம் வகுப்பு ஆசிரியரான கார்த்திக்ராஜா என்பவர் இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதற்காக அவர், 4-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
ALSO READ THIS ; குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
இதனை அப்பகுதி மக்கள் பாராட்டி வந்தனர். இது பற்றி அறிந்த அருண்மொழி தேவன் எம்.எல்.ஏ. கத்தாழை கிராமத்திற்கு நேரில் சென்று ஆசிரியர் கார்த்திக்ராஜாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவப்பிரகாசம், தலைமை கழக பேச்சாளர் முருகமணி, மாவட்டபேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சபரி ராஜன், செல்வராஜ், ஊராட்சி செயலாளர் சிற்றரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment