பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் தொடர்பாக.பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 10, 2022

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் தொடர்பாக.பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் தொடர்பாக.பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் செயல்முறைகள்
பழங்குடியினர் நல கல்விச் சங்கத்தின்கீழ் இயங்கிவரும் சேலம் மாவட்டம் அபிநவம் மற்றும் ஏற்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை, நீலகிரி மாவட்டம் மு.பாலாடா, திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு, நாமக்கல் மாவட்டம் செங்கரை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் குமிழி ஆகிய 7 மாவட்டங்களில் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணியில் பணிபுரிய முதுகலை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டு பணி அனுபவமும் மற்றும் ஆங்கில பயிற்று மொழியில் அனுபவம் உள்ள விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெற்றனுப்புமாறு பார்வையில் காண் கடிதம் வாயிலாகக் கோரப்பட்டுள்ளது. 
மேலும் தேரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையிலான ஊதியம் (56900-180500, Level-23) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையில் காண் கடிதத்தின்படி பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களில் மேற்காண் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய முதுகலை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டு பணி அனுபவமும் மற்றும் ஆங்கில பயிற்று மொழியில் அனுபவம் உள்ள ஆசிரியர்களிடமிருந்து விருப்பக் கடிதம் மற்றும் இணைப்பில் காணும் படிவம் ஆகியவற்றினை 15.12.2022 அன்று மாலை 5.00 மணி வரை மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்கள் பெற்று விருப்பக் கடிதம் அளித்த ஆசிரியர்கள் விவரத்தினை பட்டியலிட்டு தொகுத்து முகப்புக் கடிதத்துடன் 19.12.2022 க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 
அதன் நகலை இவ்வாணையரக டபிள்யு.2 பிரிவு dsew2sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.12.2022 அன்றே அனுப்பிவைத்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு-படிவம் FRES 09.12.2022 இணை இயக்குநர்(மேல்நிலை) 9114 பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழியாக )

No comments:

Post a Comment