இசைத் துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...! Music Courses and Jobs...! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 10, 2022

இசைத் துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...! Music Courses and Jobs...!

இசைத் துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...! Music Courses and Jobs...!

இசையால் மயங்காத உயிர்கள் உலகில் இல்லை என்பது பழமொழி. அதை எவரும் மறுக்க முடியாது. கேட்கும் திறனுள்ள ஒவ்வொரு உயிரினமும் இசையால் ஈர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இசைத் துறையில் இருக்கும் படிப்புகளையும், அதுதொடர்பான வேலைவாய்ப்புகளையும் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். 

 யார் தேர்ந்தெடுக்கலாம்? 

இசை மீதான ஈர்ப்பு, உண்மையான ஆர்வம், அக்கறை மற்றும் ஊக்கம் ஆகிய பண்புகள் ஒருவர் இசைத்துறையில் வெற்றியடைவதற்கு முக்கியமானவை. உதாரணமாக, ஒருவருக்கு இயல்பிலேயே பாடும் திறன் இருக்கலாம். ஆனால், அதையே ஒரு தொழிலாக மேற்கொள்வதற்கு நல்ல பயிற்சி தேவை. இசைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதென்பது, இசைத்துறையில் நுழைவதற்கான முக்கிய நுழைவு வாயில் என்பது உண்மைதான் என்றாலும், அபரிமிதமான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியம். 
இசைத் துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...! Music Courses and Jobs...!

இசைத் துறையில் தடம் பதிக்க நினைக்கும் ஒருவருக்கு, இசையின் மீது காதல், இசை நுட்ப அறிவு, அதாவது, நேரம் மற்றும் ரிதம் ஆகியவற்றின் அறிவு, பன்முகத் திறமை, படைப்பாக்கத் திறன் மற்றும் மேடையில் செயல்படக்கூடிய தன்னம்பிக்கை போன்றவை வேண்டும். இவை தவிர, சரியான நபர்களுடனான தொடர்பு, பயிற்சி பெறுவதற்கான பண வசதி, திறமையை சந்தைப்படுத்துவதற்கான திறனும் முக்கியம். இசைத் துறையில் படிப்புகளை மேற்கொண்டோர், அதிகளவில், இசை ஆசிரியர்களாவது, கச்சேரிகளில் பாடுவது, இசைக் கருவிகளை இசைப்பது உள்ளிட்ட விஷயங்களையே அதிகம் சிந்தித்து, அவைகளை நோக்கியே செல்கிறார்கள் என்ற விமர்சனம் உண்டு. ஆனால், அவைகளைத் தாண்டி, கம்போசர், பாடல் எழுதுபவர், இசை வெளியீட்டாளர், இசை தொடர்பான பத்திரிகையாளர், டிஸ்க் ஜாக்கி, வீடியோ ஜாக்கி, மியூசிக் தெரபிஸ்ட் மற்றும் ஆர்டிஸ்ட் மேனேஜர் உள்ளிட்ட பல்வேறான பணி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. யூ-டியூப், பேஸ்புக் வருகைக்குப் பிறகான காலகட்டத்தில், இசைத் துறை பணி வாய்ப்புகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. 

பணி சூழல்கள் 

 தொலைக்காட்சி அலைவரிசைகள் (Channels), எப்.எம். ரேடியோ, அலைவரிசை நிலையங்கள், இசை அலைவரிசைகள், கலை மற்றும் பொதுமக்கள் தொடர்புடைய அரசு துறைகள், தயாரிப்பு மையங்கள், இசைக் குழுக்கள், இசை ஆய்வு மையங்கள், இசை நிறுவனங்கள், இசைக்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் மியூசிக் தெரபிஸ்ட் பணி, பத்திரிகைகள் இவை தவிர, சொந்தமாக தமது இல்லத்தில் இசை வகுப்புகளை நடத்துதல் மற்றும் இசைப் பள்ளிகளை ஏற்படுத்தி நடத்துதல். 
இசைப் பணிகள் 

 பாடல் எழுதும் திறமையும், இசைத் திறமையும் இயல்பிலேயே உள்ளவர்கள் இத்துறைக்கு வரலாம். ஒரு கம்போசர் என்பவர், இசையை உருவாக்கி எழுதி, பின்னர் அதை பாடல் வரிகளுடன் பொருத்தமான முறையில் இணைத்து, ஒரு புதிய பாடலை உருவாக்குகிறார். பாடகர்கள், தனியாகவோ அல்லது குழுவாகவோ, இசைக் கருவிகளுடனோ அல்லது இல்லாமலோ செயல்படுகிறார்கள். இசைப் பதிவின் பல்வேறான அம்சங்கள் மற்றும் கூறுகளை இணைத்து, சரியான முறையில் பொருத்தி, ஒரு முழுமையான கலைப் படைப்பாக ரசிகர்களுக்கு வழங்கும் பணியில் தயாரிப்பாளர் ஈடுபடுகிறார். 

இசைத் துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...! Music Courses and Jobs...!

ஆர்டிஸ்ட் மேனேஜ்மென்ட், இது பெரிய அளவில் வளர்ந்துவரும் துறை. திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் வணிக முறையில் பேச்சு நடத்துதல் உள்ளிட்ட பல பணிகள் இதில் அடக்கம். தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில், இவர்கள் கலைஞர்களுக்கான வாய்ப்பு பெறுகிறார்கள். இசை பத்திரிகையாளர், இசை நிகழ்ச்சி தொடர்பான விமர்சனங்களை பத்திரிகைகளில் எழுதுதல் மற்றும் அதுதொடர்பான இதர தகவல்களை அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார். ஆரம்ப பள்ளிகள் முதல், கல்லூரிகள் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை, இசை ஆசிரியர்களுக்கான தேவை எங்கும் நிறைந்துள்ளது. வீடியோ ஜாக்கி, டிஸ்க் ஜாக்கி போன்ற பல்வேறான புதிய இசை அலைவரிசைகளின் வருகையை அடுத்து, மேற்கண்ட பணிகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. 

இசைக் கல்லூரிகள் 

 தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறான இசைக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள இசைத் துறைகள் முக்கியமானவை. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய பகுதிகளில் அரசு இசைக்கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் ரெகுலர் மற்றும் பகுதிநேர வகுப்புகளும் நடைபெறுகின்றன. இவையின்றி, அரசு உதவிபெறும் கல்லூரி திருச்சியில் இயங்குகிறது. 

 மரபு வழியிலான இசை (folk art), பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், கடம், கஞ்சிரா, நாதஸ்வரம் மற்றும் தவில் போன்ற வாத்தியக் கருவிகளின் இசை ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர, வாய்ப்பாட்டு இசையில் (முதுகலை இசை கலைமணி), 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு, நட்டுவாங்கத்தில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர்கள் பயிற்சியில், ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பு போன்றவையும் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, மொரீஷியஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஜப்பான், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறான வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இங்கு வந்து இசைக் கல்வியை பயில்கிறார்கள். மேலும், இந்தியாவின் இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இக்கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 
 இசைப் பள்ளிகள் 

 இசைக் கல்லூரிகளைப் போலவே, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம்், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அரசு மாவட்ட இசைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மேற்கண்ட இசைப் பள்ளிகள், வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில், 3 ஆண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. இவைமட்டுமின்றி, தமிழகம் முழுக்க மேலும் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் இசை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment