ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் குறைந்த மின்சாரத்தில் அதிகம் வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி., 'பல்பு, டியூப் லைட்' மற்றும் மின் விசிறி ஆகிய சாதனங்களை, மின் வாரியம் பொருத்த உள்ளது.
மின் வாரியம் சார்பில், அரசு அலுவலகங்களில் எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 47; தர்மபுரியில் 51; அரியலுாரில் 37; துாத்துக்குடி, கோவில்பட்டியில், 24 ஆரம்ப சுகாதார நிலையங்களில், குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் 3,200 எல்.இ.டி., டியூப் லைட்கள் பொருத்தப்பட உள்ளன.
மேலும், 9 வாட்ஸ் திறனில் 740 எல்.இ.டி., பல்புகளும், 2,250 மின் விசிறிகளும் பொருத்தப்பட உள்ளன.
கன்னியாகுமரியில் 35; தர்மபுரி 38; சிவகங்கையில் 30 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 4,548 எல்.இ.டி., டியூப் லைட்களும், 2,965 மின் விசிறிகளும் பொருத்தப்பட உள்ளன. இதற்காக 2.50 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், எல்.இ.டி., மின் சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன.
No comments:
Post a Comment