குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய்க் கல்வி உரிமைச்
சட்டம்,2009-இன்படி பள்ளி மற்றும் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு
உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பள்ளிகளை அனைத்து வகையிலும்
மேம்படுத்திக் குழுந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்திட சமூகத்தின்
ஒரு அங்கமான பெற்றோர்களின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமானது.
அதனடிப்படையில், பார்வையின்படி, பள்ளி மேலாண்மைக்
மறுகட்டமைப்பானது கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல், ஜுலை மாதங்களில்
நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு
குறித்த முதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேம்பாடு மற்றும்
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்குவகிக்கும் பள்ளி
மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
குழு
எனவே, முதற்கட்டமாக மாநில அளவில் தெரிவுசெய்யப்பட்ட 48
முதன்மைக் கருத்தாளர்களுக்கு (மாநிலப் பயிற்சி அலகு-STU) (BRTEs: 41 மற்றும்
DIET Faculties: 7) உண்டு உறைவிடப் பயிற்சியாக சேலம், ஏற்காட்டில்
"நெறியாளுகைத் திறன்" பயிற்சியானது 27.05.2023 முதல் 31.05.2023 வரை
நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள் (மாவட்ட பயிற்சி
அலகு DTU) பயிற்சியானது தெரிவுசெய்யப்பட்ட BRTEs ஒரு வட்டாரத்திற்கு
இருவர் மற்றும் SMC-DC ஒருவர் ஆகியோருக்கு இரண்டு நாட்கள் உண்டு
உறைவிடப் பயிற்சியாக மண்டல அளவில் 14.09.2023 முதல் 12.10.2023 வரை
நடத்தப்பட்டது.

No comments:
Post a Comment