தேசிய வருவாய் வழி, தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
2023-24-ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வுக்கு ஏற்கனவே கடந்த 4-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment